சீனாவில் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

#China #Arrest #Prison #Minister #Lanka4 #Defense #corruption
Prasu
1 month ago
சீனாவில் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

சீனாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்ஹே 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். இவரை தொடர்ந்து, லி ஷாங்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

இதனிடையே, இவர்கள் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து இருவரையும் நீக்கம் செய்ய சீன ஜனாதிபதி ஜின்பிங் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, வெய் பெங்ஹே மற்றும் லி ஷாங்பு மீதான ஊழல் புகார்கள் குறித்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 

இந்த விசாரணையில் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கும் மரண தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4