நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

#SriLanka #Warning #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு (DSDs)  மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை இன்று  இரவு 9.00 மணி வரை அமலில் இருக்கும். 

மண்சரிவு விடுக்கப்பட்ட பிரதேசங்கள் வருமாறு, 

பதுளை மாவட்டம்: பஸர, பிரதேச செயலகப் பிரிவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 

 குருணேகாலா மாவட்டம்: ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 

 மாத்தளை மாவட்டம்: நௌலா பிரதேச செயலகப் பிரிவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 

 மொனராகலை மாவட்டம்: அம்பங்கங்க கோரளை, ரத்தோட்டை, பாதல்கும்புரா, மற்றும் வெல்லவாயா பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 

 இரத்தினபுர மாவட்டம்: கொடகவெல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4