பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக செப்டம்பரில் இந்தியாவிற்கு வருகை தரும் புடின்
#India
#Russia
#Lanka4
#Putin
#President
#Visit
#Summit
Prasu
4 hours ago
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், செப்டம்பர் 12-13 திகதிகளில் புது தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார்" என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் குறிப்பிட்டுள்ளார்.
புடின் கடைசியாக, டிசம்பர் 2025ல் நடைபெற்ற 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக வருகை தந்திருந்தார்.இது, ஓராண்டில் புடின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.
இந்த மாத தொடக்கத்தில், பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புது தில்லிக்கு வந்திருந்தார்.
(வீடியோ இங்கே )