அம்பாறைக்கு ரூ. 22,000 மில்லியன்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடி உரை!

#SriLanka #Ampara #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
அம்பாறைக்கு ரூ. 22,000 மில்லியன்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடி உரை!

அம்பாறை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (22) பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் எதிர்கால நிர்வாகம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 22,000 மில்லியன் ரூபா (22 பில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதியைக் கொண்டு வீதிகள், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் வீடமைப்புத் திட்டங்களை 2026 ஆம் நிதி ஆண்டுக்குள்ளேயே முறையாகப் பூர்த்தி செய்து, மக்களுக்கு விரைவாகப் பலன்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்.

அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் காடழிப்பு மற்றும் காணி ஆக்கிரமிப்புகள் குறித்து இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஒருவரின் தலைமையின்கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று உடனடியாக நியமிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கல்வி வலயங்கள் போன்ற நிர்வாகக் கட்டமைப்புகள் இனிவரும் காலங்களில் இனங்களின் அடிப்படையில் பிரிக்கப்படக் கூடாது என்பதை ஜனாதிபதி திட்டவட்டமாக சுட்டிக்காட்டினார். மாறாக, நிலப்பரப்பின் அளவு மற்றும் மக்கள் தொகை போன்ற பொதுவான மற்றும் நியாயமான அளவுகோல்களின் அடிப்படையிலேயே இவை அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடலரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரைப் பகுதியைப் பாதுகாப்பதோடு, அதனை மையப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முறையான திட்டமொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் கல்ஓயா ஆறு பெருக்கெடுப்பதனால் ஏற்படும் வெள்ள அபாயம் மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் விரைவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4