ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஹோர்மூஸ் ஜலசந்தி ஊடாக பயணிக்கும் கப்பல்கள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஈரான் நேற்று கட்டளையிட்டுள்ளது.
இல்லையெனில் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்மூலம் அப்பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை ஈரான் நிலைநிறுத்தியுள்ளது.
ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, "ஹோர்முஸ் ஜலசந்தியின் நிர்வாகம், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளால் முழு அதிகாரத்துடன் செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அனைத்து கப்பல்கள், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் ஆகியவை குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படையிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறினால், அவற்றின் போக்குவரத்துப் பாதுகாப்பு கடுமையாகப் பாதிக்கப்படும்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )