மலையகத்தில் தீ விபத்து: 2 லயன் அறைகள் சேதமடைந்ததால் குடும்பங்கள் பாதிப்பு!
#SriLanka
#Lanka4
#fire
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
10 hours ago
லுனுகலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சோலண்ட்ஸ் தோட்டத்தின் சுவின்டன் பிரிவில் 24ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் இன்று (01) காலை வேளையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக மூன்று குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட தீப்பரவலை பிரேதச மக்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள போதிலும் குறித்த தீ பரவலில் இரண்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்ததுள்ளதுடன் ஒரு வீட்டிற்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீப் பரவல் ஏற்பட்ட சந்தர்பத்தில் குடியிருப்புகளில் பொது மக்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக அறிந்து லுனுகலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தீ பரவல் மின்சார ஒழுக்கினால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களா என இதுவரை கண்டறியப்படவில்லை.
(வீடியோ இங்கே )