களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - சந்தேகநபர் கைது!
களுத்துறை, வெட்டுமக்கடையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சந்தேக நபர், பயகலையைச் சேர்ந்த 44 வயதான சம்பத் குமாரதுங்க, என்றழைக்கப்படும் “பொன்ச்சியா” என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஹெராயின் கடத்தல் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தேக நபர் இதற்கு முன்னர் எதிர்கொண்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் இன்று (03) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )