நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யவே எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது : நாமல்
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்வதற்காக, அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தரமற்ற நிலக்கரியின் காரணமாக மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக எண்ணெய் எரிக்க வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், தினமும் ஏழு முதல் எட்டு இலட்சம் லிட்டர் எண்ணெய் எரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
நுகேகொடவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "நீங்கள் நாட்டு மக்களிடம் கேட்டால், அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் சரியான பதிலைக் கூறுவார்கள். ஏனெனில், அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
அது எல்லாப் பாரத்தையும் மக்கள் மீது சுமத்துகிறது. முன்பு, விலைகளை உயர்த்த அரசாங்கங்கள் தேவையா என்று அவர்கள் கேட்டார்கள். இப்போது, ஆட்சிக்கு வந்த பிறகு, தங்களின் திறமையின்மை, மோசடி, ஊழல் மற்றும் நஷ்டங்கள் அனைத்தையும் மக்கள் மீது சுமத்துவது போல் தெரிகிறது.
தேர்தல்ஒன்று நடந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒருபுறம், பிராந்தியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும், மாகாண சபைகளில் உள்ள அதிகார மற்றும் நிதி நிர்வாகப் பொறுப்புகள் இன்று ஜனாதிபதியின் ஒன்பது அரசியல் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒன்பது பேருக்குப் பதிலாக மக்கள் பிரதிநிதிகளுக்கு அது வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )