உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தடைப்படக் கூடாது - அருட்தந்தை வலியுறுத்தல்!
#SriLanka
#Easter Sunday Attack
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தடைப்படக் கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் இன்று (8) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், குறித்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிமை உண்டு.
எனவே அந்த விசாரணைகள் எந்தவொரு அழுத்தங்களாலும் இடைநிறுத்தப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே