இஸ்ரேலும், ஈரானும் அமைதிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்து!
#SriLanka
#Israel
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, அமைதிக்கு இன்னும் சிறிது வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்ட அவர், "மத்திய கிழக்கில் சமீபத்தில் அதிகரித்துள்ள வன்முறையானது, ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்துடன் தொடர்புடைய ஆபத்துகளையும், அது ஏற்படுத்தக்கூடிய தாங்க முடியாத விளைவுகளையும் தெளிவாக நினைவூட்டுகிறது," எனக் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் போது, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு முக்கிய மத்தியஸ்தராக இஸ்லாமாபாத் சமீபத்திய மாதங்களில் உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே