பிரதமர் அட்டாலின் ராஜினாமாவை நிராகரித்த பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன்
பிரான்சில் திடீர் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, பிரதமர் கேப்ரியல் அட்டாலின் ராஜினாமாவை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நிராகரித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, தற்போதைக்கு பிரதமராகப் பதவியில் நீடிக்குமாறு அட்டாலை மக்ரோன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இரண்டு கட்ட சட்டமன்றத் தேர்தல்களில், மக்ரோனின் கூட்டணி 163 இடங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
577 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில், இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான புதிய மக்கள் முன்னணி (NFP), 182 இடங்களுடன் ஒப்பீட்டுப் பெரும்பான்மையைப் பெற்றது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் தனது மறுமலர்ச்சிக் கட்சி கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு அதிபர் ஜூன் 9 அன்று தேசிய சட்டமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து, புதிய சட்டமன்றத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே