பிரான்சில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு
#Death
#France
#children
#Lanka4
#heat
#Climate
#L4
Prasu
4 hours ago
பிரான்சில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக பதிவாகியுள்ளது.
ஐரோப்பாவைத் தாக்கி வரும் கடும் வெப்பம் கிழக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 35°C (95°F) வெப்பநிலையில் 15 கோடி மக்கள் மூச்சுத்திணறி வருகின்றனர்.
இந்த வெப்ப அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையானதாகவும் பரவலானதாகவும் உள்ளது என்றும், இப்பகுதியின் 850 பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் முன்னெப்போதும் இல்லாத வெப்ப அழுத்தத்துடன் போராடி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை நெருக்கடியே இந்த அதீத வெப்பநிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே