இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 536 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக எரிபொருள் விலைகள் மற்றும் இறக்குமதி அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பால், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 2026 மே மாதத்தில் 536 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2025 மே மாதத்தில் 252.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் இந்த ஆண்டில் 112 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவினம் அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
2025 மே மாதத்தில் 197.2 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவினம், 2026 மே மாதத்தில் 418.7 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேபோல், கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவினம் 2025 மே மாதத்தில் 55.5 மில்லியன் டொலரிலிருந்து 2026 மே மாதத்தில் 94.9 மில்லியன் டொலராக, அதாவது 70.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதிச் செலவினமும் 2025-ல் 0.1 மில்லியன் டொலரிலிருந்து 2026-ல் 22.4 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே