சீனியின் அளவு அதிகரிப்பால் சுப்பிரமணி சோர்வு: பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட தடை உத்தரவு!
பாதயாத்திரையில் தொடர்ந்து நடந்து வரும் சுப்பிரமணி, இதுவரை மூன்று இடங்களில் சோர்வடைந்து அதற்கு சிகிச்சையளிக்கட்டுள்ளது. நேற்றிரவு விநாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை அடைந்தபோதும் சுப்பிரமணி மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டதால், அங்கேயும் அதற்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்களம் விதித்துள்ள தடைகள் வனஜீவராசிகள் திணைக்கள சட்ட ஆலோசகரும் சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்: பாதயாத்திரை செல்லும் வழியெங்கும் மக்கள் யோகட் மற்றும் பால் வழங்கியதால், சுப்பிரமணியின் உடலில் சீனியின் (சர்க்கரை) அளவு அதிகரித்துள்ளது.
இது அதன் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. ஏற்கனவே நடந்து களைப்படைந்துள்ளதால், அதனைத் தூக்கித் தடவுவதையோ அல்லது வற்புறுத்தி அழைப்பதையோ தவிர்க்க வேண்டும்.
பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் "சுப்பிரமணி தற்போது உகந்தை மலையை நோக்கித் தனது இறுதிக்கட்டப் பயணத்தில் உள்ளது.
அது கதிர்காமம் வரை பாதுகாப்பாகத் தனது பயணத்தைத் தொடர வேண்டுமாயின், பக்தர்கள் அனைவரும் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்."
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே