முழு பலத்துடன் பதிலடி கொடுப்பது உறுதி - ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்
#Attack
#Israel
#War
#Lanka4
#Warning
#Iran
#L4
Prasu
2 days ago
ஜோர்டானின் அகாபா நகரை நோக்கி ஏவப்பட்ட ஈரான் ஏவுகணையை இஸ்ரேலிய மற்றும் ஜோர்டான் படைகள் இடைமறித்ததைத் தொடர்ந்து, ஈரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் தனது நாடு வலுவாகப் பதிலடி கொடுக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவினால், நாங்கள் அவர்களை முழு பலத்துடன் தாக்குவோம்" என்று ஒரு மீட்பு சேவை மையத்திற்குச் சென்றபோது அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், "அமெரிக்கா தனது கொள்கையை மாற்றினால், அதுவும் நடக்கக்கூடிய ஒன்றுதான், தெஹ்ரானுக்கு எதிராக தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே