இந்துவாக இருந்தபோது சாப்பாட்டில் நஞ்சு கலந்தவர்கள் தற்போது பௌத்தனானவுடன் பிரசங்கத்துக்கு அழைக்கின்றனர் - மதிப்பு மதத்துக்கா? மனிதருக்கா?
#SriLanka
#Hindu
#Temple
#Lanka4
#Monk
#L4
#Buddhist
Prasu
5 hours ago
ஒரு இந்து அய்யராக இருந்தபோதும் பிராமணனாக இருந்தபோதும் கோவிலில் இருந்து அடிச்சி துரத்தப்பட்டு நஞ்சு வைத்து கொல்ல முயற்சி செய்யப்பட்டு பின்னர் மனமுடைந்து பௌத்தனாக மாறி பௌத்த துறவியாக மாறி ஒரு ஆசிரமத்திற்கு தலைமை தாங்கும் போது இந்து மதத்தின் கீழ் இயங்குகின்ற ஒரு அம்மன் கோவிலுக்கு தற்போது பிரசங்கம் செய்வதற்கு அழைக்கப்படுகிறார்.
இந்த மாற்றம் பௌத்த மதத்திற்கு கிடைக்கின்ற மரியாதையா அல்லது இந்த பிக்குவின் தகைமைக்கு வழங்கப்படும் மரியாதையை?
மேற்குறிப்பிட்டவாறு துறவி ஒருவர் கேகாலை மாவட்டத்தின் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் அலங்கார தேர் திருவிழாவில் சிறப்பு ஆன்மீக தர்ம போதனை செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.
சாசன கீர்த்தி, சாம கீர்த்தி, வினய அலங்கார,லங்கா புத்திர,தேச அபிமானி போகவந்தலாவை ராகுல தேரரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே