கம்பளையில் பரபரப்பு: ஆணொருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Lanka4
#Gampola
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
Abi
3 hours ago
கம்பளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட போத்தலப்பிட்டிய, பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் ஆற்றில் சடலம் மிதந்ததை அவதானித்து உடனடியாக கம்பளை காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், சடலத்தை மீட்டு ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பளை ஆதார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே