அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தலைமை நிதி அதிகாரிக்கு 4 மாத சிறை மற்றும் 9,500 டாலர் அபராதம்
ஒரு தண்டுவட உள்வைப்பு நிறுவனத்தின் இந்திய வம்சாவளி தலைமை நிதி அதிகாரி, போலியான ஆலோசனைக் கட்டணங்களுக்கு ஈடாக நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்த அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இலஞ்சம் கொடுத்ததற்காக, நான்கு மாத சிறைத் தண்டனையை எதிர்கொள்கிறார்.
சிறைத் தண்டனைக்குப் பிறகு, கேம்பிரிட்ஜைச் சேர்ந்த 41 வயதான ஆதித்யா ஹுமத், ஒரு வருடத்திற்கு மேற்பார்வையிடப்பட்ட விடுதலையில் இருப்பார் மற்றும் 9,500 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்துவார்.
இலஞ்ச எதிர்ப்புச் சட்டத்தை மீறுவதற்கான சதித்திட்டம் தொடர்பான ஒரு குற்றச்சாட்டை அவர் முன்னதாக ஒப்புக்கொண்டார்.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்யாத பணிகளுக்காக, போலியான ஆலோசனைக் கட்டணங்கள் என்ற பெயரில், 540,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான லஞ்சத்தை வழங்கவும், வழங்குமாறு வழிநடத்தவும் ஹுமாத் சதி செய்ததாக, மாசசூசெட்ஸ் மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே