தந்தையின் மறைவுக்குப் பின் மெஸ்சியின் முதல் கோல்!
கால்பந்து சிறப்பாட்டக்காரர் லியோனல் மெஸ்சி தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது முதல் கோலை அடித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற மேஜர் லீக் சக்கர் (MLS) போட்டியில் அவர் அங்கம் பெற்றுள்ள இன்டர் மியாமி (Inter Miami) அணி பிலடெல்பியா யூனியன் (Philadebhia Union) அணியுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையைத் தழுவியது.
ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் இடது காலால் மிக அற்புதமான முறையில் கோலடித்த மெஸ்சி, கோலடித்ததும் தனது கைகளால் வானத்தை நோக்கி நன்றி செலுத்தினார்.
மெஸ்சியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்சி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதியன்று தனது 68-வது வயதில் காலமானார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு சொந்த ஊரிலிருந்து திரும்பிய மெஸ்சி, தனது முன்னைய இரண்டு போட்டிகளில் கோலடிக்கத் தவறியிருந்த நிலையில், தற்போது கோல் கணக்கை ஆரம்பித்துள்ளார்.
இந்த பருவத்தில் இன்டர் மியாமி அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்சி, மொத்தம் 13 கோல்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் அவர் லீக்கின் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே