இங்கிலாந்தில் நடந்த ஒரு கார் விபத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மரணம்
#Death
#Police
#Accident
#Road
#LANKA4
#ENGLAND
#L4
Prasu
1 hour ago
வடகிழக்கு இங்கிலாந்தில் நடந்த ஒரு கார் விபத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
ஒரு முக்கிய சாலையில் தவறான திசையில் சென்ற வாகனம், நிண்டு கொண்டிருந்த காவல் வாகனம் மீது மோதியதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
மிடில்ஸ்பரோவின் கிழக்கே உள்ள சவுத் பேங்க் பகுதிக்கு அருகில், இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், இரண்டு வாகனங்களிலும் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கிளீவ்லேண்ட் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
விபத்தின் சூழ்நிலைகள் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயிரிழந்த அனைவரையும் முறையாக அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே