பலாலிச் சந்தியில் 10 வாரங்களாக தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்: சுமந்திரனுடன் பங்கேற்றார்

#SriLanka #M. A. Sumanthiran #Protest #LANKA4 #release #land #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
பலாலிச் சந்தியில் 10 வாரங்களாக தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்: சுமந்திரனுடன் பங்கேற்றார்

பலாலிச் சந்தியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த 10 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுடன் இணைந்து இன்று பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீண்டகாலமாக தங்களது சொந்தக் காணிகளை மீளப் பெறுவதற்காக போராடி வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பலாலி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் நீண்டகாலமாக விடுவிக்கப்படாததால், உரிமையாளர்கள் தங்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிமொழிகளை வழங்கியுள்ள போதிலும், பல காணிகள் இதுவரை பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 10 வாரங்களாக வெயில், மழை உள்ளிட்ட எந்தச் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும், அவர்களின் காணி உரிமை மற்றும் மீள்குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4