வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா 10 டன் நிவாரணப் பொருட்கள்!

#India #LANKA4 #Flood #Nepal #Relief #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா 10 டன் நிவாரணப் பொருட்கள்!

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா தனது மனிதாபிமான உதவியை மேலும் அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 10 டன் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் (HADR), அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியா நேபாளத்துடனும் அந்நாட்டு மக்களுடனும் தொடர்ந்து துணை நிற்கும் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்கும் நோக்கில் இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4