22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் 30 மனுக்கள்!

#SriLanka #LANKA4 #Court #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் 30 மனுக்கள்!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

இதுவரை குறித்த திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், 3 மனுக்கள் திருத்தச்சட்டமூலத்திற்கு ஆதரவாகவும், 27 மனுக்கள் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மையை ஆராய்வதற்காக பிரதம நீதியரசரால் சிறப்பு உயர் நீதிமன்ற ஆயம் நியமிக்கப்படவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த விவகாரம் தொடர்பில் 3 வாரங்களுக்குள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4