தமிழகத்தில் இன்று முதல் கோவில்களில் தொலைபேசி பயன்படுத்த தடை

#India #Tamil Nadu #Temple #LANKA4 #Mobile #Banned #L4
Prasu
1 hour ago
தமிழகத்தில் இன்று முதல் கோவில்களில் தொலைபேசி பயன்படுத்த தடை

கோவில்களில் பக்தர்கள் தொலைபேசிகள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி, ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது.

இதனை தடுப்பதற்காக கோவிலுக்குள் தொலைபேசி பயன்படுத்துவதற்கு இந்துசமய அறநிலையத்துறை இன்று முதல் தடை விதித்துள்ளது.

ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தொலைபேசி அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 52 பெரிய கோவில்களில் தொலைபேசி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4