மின் விநியோகத்தில் தடை ஏற்படுமா? வெளியான அறிவிப்பு
போதுமான நீர்மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுவதால், மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், நொரோச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இரண்டு நிலக்கரி சரக்குகள் விரைவில் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சரக்கு நாளைய தினமும், இரண்டாவது சரக்கு செப்டம்பர் 12 அன்றும் வந்து சேரும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சரக்குகளிலிருந்தும் நிலக்கரி இறக்கப்பட்டவுடன், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அமைச்சர் கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே