பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு
#SriLanka
#CourtOrder
#pillaiyan
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Remand
Thamilini
2 hours ago
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பில் இடம்பெற்ற 05 கொலைகள் தொடர்பாக நேற்று காணொளி வாயிலாக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.