சமூக வலைதளங்களில் பரவிய 11 வயது சிறுவனின் போதைப்பொருள் காணொளி: காவல்துறை விசாரணை
11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த காணொளியை அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் (Children and Women Bureau) விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, காவல்துறை பிரதி காவல்துறை மா அதிபர் தர்ஷிகா குமாரியின் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை அதிகாரிகள் செப்டம்பர் 18 அன்று கனேமுல்ல பகுதியில் உள்ள சுமேதா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் குறித்த சிறுவனைக் கண்டறிந்தனர்.
அத்துடன், பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தச் சிறுவன் பாதுகாப்புக் காவலில் எடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன், அவரின் தாயாருடன் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரது நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.