அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பு
#SriLanka
#Protest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#SivarasaAnojan
Thamilini
4 hours ago
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் அனோஜனின் உயிரைப் காப்பாற்றுவதற்காக, இனம், மதம், மொழி என அனைத்து எல்லைகளையும் கடந்து மனிதாபிமான அடிப்படையில் கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் நற்பிட்டிமுனையில் நடத்தப்பட்டது.
நற்பிட்டிமுனை முதலாம் கட்டை சந்தியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
அனோஜனின் விடுதலைக்கான நீதியை வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இப்போராட்டத்தில் பிரதேச பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பெருந்திரளானோர் கட்சி, மத பேதமின்றி பங்கேற்றுத் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றனர்.