கஞ்சா செடிகளை வளர்த்துவந்த சந்தேகநபர் ஒருவர் கைது

Nila
3 years ago
கஞ்சா செடிகளை வளர்த்துவந்த சந்தேகநபர் ஒருவர் கைது

மிரிஹான – தலபத்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மேல் மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த சந்தேகநபர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.