17 வயது சிறுவனை மணம்முடித்த 19 வயது பெண் கைது!

#Arrest #Police #India
Nila
3 years ago
17  வயது சிறுவனை மணம்முடித்த 19  வயது பெண் கைது!

வளர் இளம் பருவ காதலும், அதனை தொடர்ந்து நடந்த கல்யாணமும், இளம் பெண்ணுக்கு சிறை தண்டனையை கொடுத்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 பதின்ம வயது(Teen Age) காதல்கள் திருமணத்தில் முடிந்தால் சிக்கலில் தான் முடிகிறது. அவசரப்பட்டு ஆசைக்காதலன், காதலியோடு ஓடிபோய் திருமணம் செய்து கொண்டு சிக்கலை சந்திப்பவர்கள் ஏராளம்.

குடி பழக்கம், விட்டுக்கொடுத்துபோகாத குணம், பொருளாதார ஸ்திரமின்மை, முடிவெடுப்பதில் பக்குவமின்மை போன்ற பிரச்சனைகளால் வாழ்க்கையே அழிந்து போனவர்கள் ஏராளம்,

பதின்ம வயது காதலர்கள் வயதை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்டு கடைசியில் போக்சோ குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. அப்படி சம்பவம் ஒரு பதின்ம வயது பெண்ணுக்கு பொள்ளாச்சியில் நடந்துள்ளது.