டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

#India
Prabha Praneetha
4 years ago
டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது என்றும் இது இன்னும் 12 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லியில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு பெய்து வரும் பருவமழையில் 1000 மி.மீ. அளவைத் தாண்டியது இதுவே முதல் முறை. இது கடந்த 11 ஆண்டுகளில் டெல்லியில் அதிகபட்ச மழையாகவும் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:-

டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இது இன்னும் 12 மணி நேரத்திற்கு நீடிக்கும்என தெரிவித்துள்ளது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4