மும்பையில் பாலியல் வன்கொடுமையால் 35 வயதுடைய பெண் உயிரிழப்பு!

#Death #India
Prasu
3 years ago
மும்பையில் பாலியல் வன்கொடுமையால் 35 வயதுடைய பெண் உயிரிழப்பு!

மும்பை - அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள Sakinaka-வில் 34 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சாலையோரத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து போலீசாரால் மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். அவர் இரும்பு ராடால் குற்றம் இழைத்த கொடூரர்களால் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். மேலும் 45 வயதான மோகன் சவுகான் என்ற நபர் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் PTI தெரிவித்துள்ளது.

இந்த கொடுமையை ‘காட்டுமிராண்டித்தனம்’ என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. போலீசார் இந்த வழக்கை விரைவாக விசாரித்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது. அதில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மனிதத்தன்மைக்கு இது அவமானம். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க, இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.