மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்

#Death #India
Prasu
3 years ago
மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்

38 வயதான சுனில் என்ற நபர், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 21 வயதான கிருஷ்ணேந்து என்ற மனைவியும், 4 வயதான ஆதவ கிருஷ்ணன் என்ற மகன் உள்ளான்.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் சுனில், கடந்த 4 மாதத்துக்கு தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் தனக்கு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதற்கான வேலைகளை சுனில் செய்து வந்த நிலையில், நேற்று மாலை சுனிலின் வீடு வெகுநேரமாக பூட்டியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சுனிலின் பெற்றோர், கதவை தட்ட முயற்சி செய்துள்ளனர்.

அப்போது வீட்டின் கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வீட்டிற்குள் உள்ள அறையில் சிறுவன் ஆதவ கிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தான். அதற்கு அடுத்த அறையில் சுனில், கிருஷ்ணேந்து பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து சுனிலின் பெற்றோர் கதறி அழுத நிலையில், இது குறித்து பரவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரகளது உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முதலில் மகனை கொலை செய்து விட்டு பின்னர் அவர்கள் தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனை கொன்று விட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.