பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்த இந்தியா!

#India
Prasu
2 years ago
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்த இந்தியா!

இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என இந்திய வெளியயுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவின் வெளியறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறு இந்தியா வந்துள்ள அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவிலின் போது இந்தியாவுக்கு அளித்த ஆதரவுக்காக அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஆப்கான் நிலைவரம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அங்கு அமைதி திரும்ப விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.