இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனப் படைகள்

Prabha Praneetha
2 years ago
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனப் படைகள்

இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது 

அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய தவாங் பகுதியில் இந்த மோதல் சில மணி நேரங்கள் நீடித்ததாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் இரு தரப்பிலும் எந்த சேதமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதி எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இந்திய- சீன உயர்நிலை பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இம் மோதல் நடந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த வாரம் சுமார் 200 சீன இராணுவம் இந்திய எல்லைக்கு மிக அருகில் இந்திய இராணுவத்தால் தடுத்து நிறுத்தியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.