கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியது இந்திய இராணுவம்!

Prabha Praneetha
2 years ago
 கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியது இந்திய இராணுவம்!

 

அருணாச்சல பிரதேசத்தின் சீனாவுடனான எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லையில் சீன இராணுவ வீரர்கள் அண்மையில் அத்துமீறி பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் இந்திய துருப்புக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா குட்டி விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் சீனாவின் அத்துமீறலை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.