ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!
Reha
2 years ago
முதல் முறையாக இலங்கை பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். 31 வயதான பெண் ஒருவருக்கு இன்று வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.
இவ்வாறு பிறந்த குழந்தைகளில் 3 ஆண் , 3 பெண் குழந்தைகளை, குறித்த தாயார் பெற்று எடுத்துள்ளார். இச்சம்பவம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதிவாகியுள்ளது. தற்போது, தாயும் 6 குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்த சம்பவம் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
தாயும், ஆறு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஒரு குழந்தை மட்டும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.