சரியானதைச் செய்வது ஒரு சவால்: ஜனாதிபதி
சரியானதைச் செய்வது ஒரு பெரிய சவால் என்றும் ஒன்றாக முன்னேறுவதன் மூலம் விரும்பிய இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (21) பிற்பகல் விவசாய சேவைகள் அதிகாரிகளுடனான காணொளி ஊடாக இடம்பெற்ற மாநாட்டின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்ப்பதன் மூலம் விரும்பிய இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்
விவசாயிகளிடம் சென்று உண்மைகளை விளக்குவது மிகவும் முக்கியம் என்று ஜனாதிபதி இதன்போது கூறினார்.
சுற்றுச்சூழலையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்கும் அதே வேளையில் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஒப்படைப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பசுமை வேளாண்மையின் குறிக்கோள் ஒரு பருவத்திற்கு மட்டுமல்ல இரண்டு தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை அரசுக்கு தெரியப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அப்போது அந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் நிபுணர்களின் உதவியை நாட முடியும் என்று அவர் கூறினார்.
யாரையும் தவறு செய்யச் சொல்ல மாட்டேன் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கூறினார்.