எனக்கு இது தனிப்பட்ட இழப்பு... புனித் ராஜ்குமார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Prabha Praneetha
2 years ago
எனக்கு இது தனிப்பட்ட இழப்பு... புனித் ராஜ்குமார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

46 வயதாகும் அவர், இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

புனித் ராஜ்குமார் மரணம் கர்நாடகா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

புனித் ராஜ்குமார் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பபு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனாக பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் அவர்களின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.


எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில் தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு ஆகும்.

பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கிய போதும் எளிமையான மனிதாரகவே புனீத் ராஜ்குமார் இருந்தார்.

தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமது குடும்பத்தில் சார்பில் இரங்கலை தெரிவிக்க கோபலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.

புனித் ராஜ்குமாரின் மறைவான் கன்னடத் திரையுலகம் தன் மிகச் சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது.

இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனீத் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.