அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரை ஆரம்பிக்க தீர்மானம்
#School
#Student
Prathees
2 years ago
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 இல் கற்கைகளை ஆரம்பிக்க
கோவிட் தடுப்புக் குழுவின் பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நவம்பர் 08 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பரிந்துரை கிடைத்தவுடன் அனைத்துப் பாடசாலைகளும் தரம் 6 முதல் தரம் 9 வரையான கற்கைகளை ஆரம்பிக்கத் தயாராகும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.