உலக நாடுகளுக்கு தாலிபான் எச்சரிக்கை!

Prasu
4 years ago
உலக நாடுகளுக்கு தாலிபான் எச்சரிக்கை!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அந்த பதவி ஏற்காமல் உள்ளது.

தாலிபான்கள் தலைமையிலான அரசை, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அங்கீகரித்து உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாலிபான்கள் அரசுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் தாலிபான் ஆட்சியை இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிப்பை பெறும் முயற்சியில் தாலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவது சாத்தியமல்ல. ஆப்கானிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். ஆப்கன் ஆட்சியையும், ஆட்சி நடத்தும் தாலிபான்கள் இயக்கத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். உலக நாடுகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தாலிபான்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.

அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லாதது தான் கடந்த முறை அவர்களுடன் போர் நடைபெற்றதற்கு காரணமாக இருந்தது. போருக்கு காரணமாக இருந்த அந்த பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது அரசியல் ரீதியில் தீர்வு கண்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா இறந்து விட்டதாக தகவல் பரவிய நிலையில் முதன்முறையாக தனது ஆதரவாளர் முன்பு அவர் தோன்றி உரையாற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வீடியோவோ, புகைப்படமோ எடுக்கப்படவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4