மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3-வது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

#India #M. K. Stalin
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3-வது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். மருத்துவ முகாம்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்.

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீர் நிலைகளை ஆய்வு செய்து, மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தல் வழங்குகிறார்.