குழந்தையை பிரிந்து தவிக்கும் சமந்தா

#Actor
Keerthi
2 years ago
குழந்தையை பிரிந்து தவிக்கும் சமந்தா

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வந்த சமந்தா, சமீபத்தில் வீடு திரும்பினார். சென்னையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்த அவர், மழையில் சிக்கிக்கொண்டார். 

இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ள சமந்தா, அதில் ஒன்று மழை சூழ்ந்த சுற்றுப்புறத்தின் ஒரு காட்சி. இன்னொன்று ஐதராபாத்தில் உள்ள தனது நாய்களான ஹாஷ் மற்றும் சாஷாவின் மற்றொரு புகைப்படம்.

சோகமாக இருக்கும் ஹாஷ் மற்றும் சாஷாவின் படத்தில் "நான் ஒருநாள் இல்லை... என் சோகமான முதல் குழந்தை" என்று குறிப்பிட்டுள்ளார். ஹாஷ் தனது சகோதரி சாஷாவை விட மிகவும் சோகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர்கள் தங்கள் அம்மாவை சென்னையில் நீண்ட நாட்கள் தங்க விடமாட்டார்கள் போல் தெரிகிறது’ என்று பதிவு செய்து இருக்கிறார்.