டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – பாடசாலைகளுக்கு விடுமுறை

Prabha Praneetha
2 years ago
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – பாடசாலைகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்கமைய அரச அலுவலகங்கள் நூறு சதவீதம் மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் கூடுமானவரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்

மேலும் ஒருவாரத்துக்கு கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.