ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி!
Reha
2 years ago
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு இலக்கம் 5 கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அது குறித்த வழக்கு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில் இன்றும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, சுகாதார வழிகாட்டுத லின் கீழ் போராட்டத்தை நடத்த அனுமதி வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.