நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கம் அமைக்கப்படும் - சஜித்
நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சமகி ஜன பலவேகவின் எதிர்ப்புப் பேரணி இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இன்று நாம் இந்த பாரிய பேரணியை நடத்துகிறோம். இந்த நாட்டில் சர்வாதிகாரத்தை அனுமதிக்க மாட்டோம்.
சரிந்து வரும் பொருளாதாரம், சீரழியும் சமுதாயத்தை இந்த நாட்டில் மீளக் கட்டியெழுப்பி மக்கள் அரசாங்கத்தை அமைப்போம் எனத் தெரிவித்தார்.
பொதுமக்கள் போராட்டத்திற்கு வரவழைக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை கோரிய தடை உத்தரவு சில நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டது மற்றும் அப்பகுதியில் உள்ள பல நீதிமன்றங்களால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில், திட்டமிட்டபடி கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு சமகி ஜன பலவேகய நடவடிக்கை எடுத்திருந்தது.