இன்றைய வேத வசனம் 19.11.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 19.11.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

வெப்சைட் பற்றி தெரியாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
ஆக்கத்திற்கும், அறிவிற்கும், அழிவிற்கும் யாரோடும் எப்பொழுதும் எங்கேயும் நாம் தொடர்பு கொள்ள முடியும் அளவுக்கு இன்றைய அறிவியல் வளர்ந்துள்ளது.

நம்முடைய உள்ளத்தில் தோன்றுகிற எதையாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டுமானால் இந்த வெப்சைட்  தேடுதல் வேட்டையை தான் ஒவ்வொருவரும் பயன்படுத்துவர்.

மொத்தத்தில் வளர்ந்து வரும் கணிணியுகத்தில் அது இல்லை என்றால் ஏதோ ஒன்றை இழந்து போவது போல தான் காணப்படும்.

இப்படிப்பட்ட இன்னும் புதிய தொழில் நுட்பங்கள் வருமேயானால் அதை வாங்குவதிலோ அல்லது பயன் படுத்துவதிலோ எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அறிவுப்பூர்மாக எதை தேடினாலும் வெப்சைட்டில் கிடைக்கும் என்ற எண்ணம் எல்லாருடைய மனதிலும் உண்டு.

அது நல்லது தான் யாராவது ஒருவர் நம்முடைய உணர்வுகளான சந்தோஷம், சமாதானம், மன்னிப்பு, அன்பு, வாழ்வின் மகத்தான அர்த்தங்கள் இவைகளை அடைவதற்கு ஏதாவது தொழில் நுட்ப்பங்கள் அறிமுகப்படுத்துவாரேயானால் எல்லாரும் வாங்குவார்கள். இல்லையா!

அப்படிப்பட்ட தொழில்நுட்பம் இருக்குமானால் அதை ஜனங்கள் முற்றுகையிட்டு இரா முழுவதும் காத்திருந்து வரிசையாக நின்று பெற்றுக்கொள்வதை பார்க்க முடியும்.

ஏனென்றால், உண்மையான சந்தோஷம், சமாதானம், மன்னிப்பு, அன்பு இவைகளை பெற்றுக்கொள்வதற்காக தியாகங்களும் யாகங்களும் செய்பவர்களும் உண்டு. 

இப்படி நாட்களாய், வாரங்களாய், வருஷங்களாய் இதற்காக காத்திருக்கும் ஜனங்களின் எத்தனை முயற்சிகள், உழைப்புகள்! இவைகள் எல்லாம் உண்மையான சந்தோஷம், சமாதானத்தை கண்டுகொள்ள முடியவில்லை.

உண்மையாகவே இவைகளின் பெட்டகம் எங்கே?  என்று கேட்போமானால் அது தேவனிடத்தில் இருக்கிறது. அவரிடத்திலிருந்து எளிதாக பெற்றுவிடலாம்.

ஆனால் நாம் செய்த பாவங்களின் விளைவாக தோன்றிய குற்ற உணர்வு அவரிடத்தில் நெருங்க விடாதபடிக்கு நம்முடைய கண்களை மறைக்கிறது.

அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (யோவான் 1:7)

ஆம், அவரிடத்தில் சென்று குற்ற உணர்வு மன்னிக்கப்படுவதற்கு அவரிடத்தில் பாவத்தை அறிக்கையிடுவோமானால் ஒரு தெளிவான இருதயம் உள்ளவர்களாக மாறுவோம்.

ஏற்கனவே அவரோடு நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்வதற்காக இலவசமாக நமக்காக அவர் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார். 

ஆகவே நமக்கு 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் வருஷத்தின் 365 நாட்களும் அவரோடு தொடர்பு கொள்ளுவதற்கு எந்த ஒரு app மும் தேவையில்லை, Download யும் தேவையில்லை.

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். 
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். 

பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். 

கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். (சங்கீதம் 121)
நாம் எங்கே தேடுகிறோம்? உலகத்தோடு நமக்குள்ள தொடர்பு பெட்டகத்தை பிடுங்கி எறிந்து தேவனோடு தொடர்பை உருவாக்குங்கள்.

அவர் பரிபூரண சமாதானத்தை, சந்தோசத்தை உங்களுக்கு தருவார். அப்பொழுது நீங்கள் அந்த உண்மையான உள்ளான தேவையை கண்டுபிடித்து மகிழ முடியும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவான் 14:27)

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!