கனவில் பெண் பேய் மிரட்டல்; உயிரை மாய்த்து கொண்ட போலீஸ்காரர்!

Reha
2 years ago
கனவில் பெண் பேய் மிரட்டல்; உயிரை மாய்த்து கொண்ட போலீஸ்காரர்!

கடலூர் ஆயுதப்படை பிரிவில் முதல் நிலை போலீசாக வேலை செய்து வரும்  33 வயதான பிரபாகரன் என்ற நபருக்கு விஷ்ணுப் பிரியா என்ற மனைவியும், எழிலவன், தமிழ்மதி என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். கடலூர் ஆனைக்குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் 2011-ல் பணியில் சேர்ந்த பிரபாகரன், அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

சில நாட்களாக, பிரபாகரனுக்கு உடல் நலம் குறைவு பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, இவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் தெரியவல்லை.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை சுபநிகழ்ச்சி ஒன்றுக்கு அனுப்பி வைத்த பிரபாகரன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டிற்கு திரும்பி வந்த அவரது மனைவி கதவை தட்டியும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது, பிரபாகரன் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன விஷ்ணுபிரியா, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உடல்நல பாதிப்பால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபாகரன் வசித்து வந்த குடியிருப்பில் தங்கி இருந்த பெண் ஒருவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அறிந்த பிரபாகரன், தனது கனவில் பெண் ஒருவர் வந்து மிரட்டுவதாக கூறியுள்ளார்.
அந்த பெண் விகார முகத்துடன் கனவில் வருகிறார் என்றும், விகார முகத்தை காட்டியே தன்னை போட்டு அமுக்குவதாகவும், கழுத்தை நெரிப்பதாகவும் பிரபாகரன் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்திருக்கிறார்.

அந்த பெண் தினமும் இப்படி கனவில் வருவதால், ஒருவேளை தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்றும் பிரபாகரன் சந்தேகப்பட்டு, பேய் ஓட்டுபவர்கள், குறி சொல்பவர்களை நம்பி சென்று கயிறுகளையும், தாயத்துகளையும் வாங்கி கட்டிக் கொண்டுள்ளார்.

ஆனால் நாளுக்கு நாள் இவருக்கு பயம் அதிகம் ஆனதால், 15 நாள் மெடிக்கல் லீவ் எடுத்து பூஜை ஆரையிலேயே இருந்து வந்துள்ளார்.

தனக்கு ஓரளவு தைரியம் வந்ததும், மறுபடியும் டியூட்டிக்கு சென்றுள்ளார். ஆனால் மறுபடியும் அந்த பெண் கனவில் வந்ததால் பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.