அரசாங்கம் எடுத்த தீர்மானம்: வீழ்ச்சியடைந்து வரும் இலங்கைத் தேயிலையின் விலை

#SriLanka
Prathees
4 years ago
அரசாங்கம் எடுத்த தீர்மானம்: வீழ்ச்சியடைந்து வரும் இலங்கைத் தேயிலையின் விலை

நாட்டில் பச்சை தேயிலை இலைகளின் விலை இன்று வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மற்றும் கென்யாவில் இருந்து தரமற்ற தேயிலையை இறக்குமதி செய்து இலங்கை தேயிலையுடன் கலந்து மீண்டும் ஏற்றுமதி செய்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது 120 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பச்சை தேயிலையின் விலை தற்போது 88 ரூபாவாக குறைந்துள்ளதாக சிறு தேயிலை உரிமையாளர்கள் சங்கத்தின் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், சிறு தேயிலை விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

வெளிநாடுகளில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்து இலங்கையின் 30% தேயிலையுடன் கலந்து மீள் ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4