நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது: எச்சரிக்கை விடுத்த எம்.பி

#Food
Mayoorikka
4 years ago
நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது: எச்சரிக்கை விடுத்த எம்.பி

நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு பாரியளவில்  ஏற்படப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (03) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த இரு வருடங்களாக வேகமாக நாட்டின் அந்நியசெலாவணி வீழ்ச்சியடைந்து வருகிறது. இது நாட்டு மக்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.

நாட்டில் கையிருப்பில் உள்ள அந்நியசெலாவணி தொடர்பான தகவல்களை நிதி அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும். இதனால் நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு பாரியளவில் ஏற்பட உள்ளது எனவும் அநுர குமார எச்சரித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4